மத்திய அரசின் திட்ட விளக்கக் கூட்டம்

பாஜக சார்பில் திருப்பூரில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

வேல் யாத்திரையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகஇளைஞரணி சார்பில் அலகுமலையிலிருந்து திருமுருகன்பூண்டி வரை இருசக்கர வாகன பேரணி நவம்பர் 8-ம் தேதி நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.

காவல்துறை சார்பில் பேரணிக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் அதே நிகழ்ச்சி மத்திய அரசின் திட்டங்கள் விளக்கக் கூட்டம் என்ற பெயரில் திருப்பூர் ரயில்நிலையம் முன் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்தலைமையிலான பாஜகவினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், காடேஸ்வரா எஸ்.தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதேபோல பெருந்தொழுவு பகுதியிலும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்