கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த ஆண்டிச்சியூரணி நெடுங் குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப்(47). முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். கரூர் அருகே சுக்காலியூரில் உள்ள ஹோட்டலில் அன்று இரவு உணவருந்திவிட்டு, சாலையை நடந்து கடக்க முயன்றார்.

அப்போது, அவ்வழியே மதுரையிலிருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நோக்கிச் சென்ற கார், ஜோசப் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜோசப், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக, விபத்தை ஏற்படுத்திய திருச்செங்கோட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சதீஷ்குமார்(36) மீது தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE