சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி முற்றுகை

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பி.கே.ஆர் லே-அவுட், வினோபா நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்உள்ளன. 15 நாட்களுக்கும்மேலாக குடிநீர் விநியோகம் இல்லை.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. சீரானஇடைவெளியில் விநியோகம்செய்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்" என்றனர்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விநியோகம் தடைபட்டதாகவும், உடனடியாக சரி செய்து குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்