வாடகை வீட்டில் சடலம் மீட்பு 3 தனிப்படைகள் விசாரணை

வாடகை வீட்டில் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி எதிரே, தனியாருக்குசொந்தமான வாடகை குடியிருப்பு உள்ளது. 9 காம்பவுண்ட் எனப்படும் இந்த குடியிருப்பில் முத்து, சங்கர் ஆகிய பெயரில் 2 இளைஞர்கள் வசித்து வந்தனர்.

கடந்த சில தினங்களாக அவர்கள் வசித்த வீடு பூட்டியிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கடும் துர்நாற்றம் வீசி யுள்ளது. திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் சென்று, வீட்டுக்குள் மூடிய நிலையில் இருந்த சிமென்ட் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது, ஆண் அல்லது பெண் என்பதைகூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவில், அழுகிய நிலையில் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.

வீட்டில் தங்கியிருந்த இருவரும் தலைமறைவான நிலையில், இந்த சம்பவம் கொலை என போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர் களின் சொந்த ஊர்களான மதுரை, தூத்துக்குடிக்கு சென்று தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்