ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சையை மீண்டும் தொடங்கக் கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் புறநோயாளிகள் சிறப் புச் சிகிச்சையைத் தொடங்கக் கோரி, சிஐடியூ சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸை காரணமாக வைத்து இன்னும் புறநோயாளிகள் சிறப்புச் சிகிச்சையைத் தொடங்க வில்லை. மீண்டும் தொடங்க வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மருத்துவமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்துக்கு சிஐடியூ சங்க மாவட்டத் தலைவர் எம். அய்யாத்துரை தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் ஆர்.முத்துவிஜயன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் 50-க்கும் மேற்பட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE