இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முருகபாண்டி தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் பூபாலு, மாநில துணைத் தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலியில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், பல்லடம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்