விசைத்தறி தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மங்கலம் பகுதி விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இருதரப்பு போனஸ் பேச்சுவார்த்தை மங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் மருதாசலமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி, செயலாளர் பழனிசாமி, துணைச் செயலாளர் கோபால் மற்றும் ஆர்.காளியப்பன், பி.வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.

விசைத்தறி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, மோகனசுந்தரம், ஏடிபி செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், ஐஎன்டியுசி செயலாளர் எம்.நடராஜ், எல்பிஎப் செயலாளர் மா.சிவசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் 2019-2020-ம் ஆண்டு போனஸாக 13.15 சதவீதம் வழங்குவதென ஒப்பந்தம் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்