அழுகிய நிலையில் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை

திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரி எதிரே உள்ள தனியார் குடியிருப்பில் முத்து, சங்கர் என்ற இரு இளைஞர்கள் வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக அவர்கள் வசித்த வீடு பூட்டியிருந்த நிலையில், நேற்று மாலை வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் மூடிய நிலையில் இருந்த சிமென்ட் தொட்டிக்குள், அழுகிய நிலையில் ஓர் உடல் கிடந்துள்ளது. அது ஆணா அல்லது பெண்ணா என்பதைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார்அனுப்பி வைத்தனர். முதல்கட்டமாக சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கடந்த மாதம் 13-ம் தேதியிலி ருந்து சம்பந்தப்பட்ட வீடு பூட்டியிருப் பதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்த கொலை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது.

தங்கியிருந்த இருவரில், ஒருவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இருவரும் சேர்ந்து வேறு எவரையும் கொலை செய்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். உடல் ஆணா, பெண்ணா என்பதுகூட கண்டுபிடிக்க முடியாத நிலையில் சிதைந்துள்ளது.

இருவர் குறித்தும் விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்