விவசாய மின் இணைப்பு பெற - விண்ணப்பதாரர்களின் பெயர், சர்வே எண் மாற்ற சிறப்பு முகாம் :

விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது, என நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் க.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் விவசாய மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களின் பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், சர்வே எண் மாற்றம் ஆகியவை செய்து கொடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதன்படி நாமக்கல் கோட்டத்தில் வரும் 29-ம் தேதி இம்முகாம் நடத்தப்பட உள்ளது.

பரமத்தி வேலூர் கோட்டத்தில் வரும் 28, 29-ம் தேதியும், ராசிபுரத்தில் 28-ம் தேதி, திருச்செங்கோடு கோட்டத்தில் வரும் 30-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பெயர் மாற்றத்திற்கு இறப்பு சான்று, வாரிசுச் சான்று, பங்குதாரர்களின் ஆட்சேபனை இல்லாத கடிதம், வருவாய் அலுவலர் சான்று ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும். சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு வருவாய் அலுவலர் சான்று, வரைபடம், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய, புதிய வருவாய் அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE