சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (40).இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தில் நாட்றாம்பள்ளி நோக்கிச்சென்றார். ஆத்தூர்குப்பம் அருகே சென்ற போது அவ் வழியாக வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நாட்றாம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்