பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி :

By செய்திப்பிரிவு

விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்குள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு இன்று (டிச.16) முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். அதே நேரம் பக்தர்கள் தரிசனம் செய்த பின் மலையிலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும். இரவு நேரங்களில் கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE