தருமபுரி  தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை (16-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி

 தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை (16-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 முதல் பகல் 2 மணி வரை ஒகேனக்கல், நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, மஞ்சுமலை, கொம்பகரை, கேரட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

மொரப்பூர்

 மொரப்பூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (16-ம் தேதி) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE