ஓடும் பஸ்ஸில் 12 பவுன் திருட்டு :

மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா(22). கடந்த 13-ம் தேதி ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநகருக்கு பஸ்ஸில் சென்றார்.

திருநகர் 3-வது நிறுத்தத்தில் அவர் இறங்கியபோது, 6 பவுன் நகை வைத்திருந்த அவரது பேக் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருநகர் போலீஸார் விசாரிக்கின்றனர். சிலைமான் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் தில் லைராணி(23). கடந்த 13-ம் தேதி சிலைமானில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் சென்றபோது அவரது பை திருடுபோனது. அதில் 6 பவுன் நகை இருந்தது. இதுகுறித்து தெற்குவாசல் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

ஜெய்ஹிந்த்புரம் அண்ணா மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஆக்னஸ்சில்வியா(54). இவரது வீட்டில், கடந்த மாதம் 3 பவுன் நகை மாயமானது. இதுகுறித்து அவர் ஜெய்ஹிந்த் புரம் போலீஸில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் வேலை பார்த்த பெண் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்