கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மாதவன் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன் ரமேஷ் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். மழையால் உயிரிழந்த அனைத்து கால் நடைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பயிர் களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும். நல்லூர், மங்களூர் பகுதியில் அமெரிக்க படை புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண் டும். சேதமடைந்த சாலைகள், பாலங்களை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக மாற்றுகுடி அமர்வுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும் உள்ளிட்டபல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago