கபடி போட்டி :

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கத்தில் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கன்னியா குமரி மாவட்டம் கருங்கல் செயின்ட் அல்போன்சா கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 48 உறுப்பு கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன. அம்மாண்டிவிளை தூய யோவான் கல்லூரி 2-வது இடத்தையும், அனந்தநாடார் குடியிருப்பிலுள்ள செயன்ட் ஜெரோம்ஸ் கல்லூரி அணி 3-வது இடத்தையும், நாகர் கோவில் தெதி இந்துக் கல்லூரி அணி 4-ம் இடத்தையும் பெற்றன. வெற்றிபெற்ற அணி களுக்கு துணைவேந்தர் கா. பிச்சுமணி சுழற் கோப்பை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்