136-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த ஏவி மேம்பாலம் : ‘கேக்’ வெட்டி கொண்டாடிய மதுரை மக்கள்

By செய்திப்பிரிவு

மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் (டிச.8, 1886) நேற்றுடன் 135-வது ஆண்டை நிறைவு செய்தது.

136-வது ஆண்டில் அடி யெடுத்து வைத்ததை கொண் டாடும் வகையில், மதுரை வைகைநதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், நீர்நிலை ஆர்வலர்கள் வைகை ஆற்றங் கரையில் கேக் வெட்டி கொண் டாடினர். இந்நிகழ்வுக்கு வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ராஜன் தலைமை வகித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பாலம் தற்போது சிதிலமடைந்து வருகிறது. இந்தப் பாலத்தின் வட்ட வடிவ தூண்கள் 7, 8-வது, தூண்கள் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் கைப்பிடிச் சுவர்கள் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பெயர்ந்துள்ளன. நூறு ஆண்டு உள்ள கட்டிடங் களை பாரம்பரியச் சின்னமாக அரசு அறிவிக்கிறது. இந்தப் பாலத் தை மதுரையின் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE