மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய பணியாளர் சஸ்பெண்ட் :

By செய்திப்பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற லஸ்கர் பணியாளர் ஒருவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வப்போது விசாரித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நோயாளிகளிடம் லஸ்கர் ஊழியர் பாண்டி என்பவர், லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரித்த மருத்துவமனை நிர்வாகம், அவரை ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது. இதுபோல் யாராவது லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE