மாநகராட்சியில் தகவல் அலுவலர்கள் மாற்றம் :

மதுரை மாநகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் பொது தகவல் அலுவலர்களாக இருந்தவர் களின் வேலைப்பளு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விரைவாக தகவல் வழங்குவதற்காக பொது தகவல் அலுவலர்கள் மாற்றப்பட்டுள் ளனர்.

அதன்படி மண்டல அலுவ லகங்களில் பொது தகவல் அலுவலராக செயல்பட்ட உதவி ஆணையாளர்கள் இனிமேல் முறையீட்டு அலுவலராக செயல் படுவர்.

மண்டல அலுவலகங்களில் நிர்வாக அலுவலர் இனிமேல் பொது தகவல் அலுவலராக செயல்படுவார். அதேபோல் மைய அலுவலகத்தில் தகவல் களை விரைவாக வழங்க பொது தகவல் அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.

மேல் முறையீட்டு அலுவல ராகத் தொடர்ந்து துணை ஆணையாளர் செயல்படுவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE