செங்கல் சூளைக்கு கரம்பை, செம்மண் எடுக்க அனுமதி கேட்டு மனு :

மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.ராஜாசங்கர், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன் மற்றும் அப்பகுதியினர் ஆட்சியர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:

சேடபட்டி ஒன்றியத்தில் எழுமலை, வண்டாரி, மல்லபுரம், சூலப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 170-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கடந்த ஓராண்டாக செங்கல் சூளைக்கு தேவையான கரம்பை, செம்மண் எடுக்க அனுமதி வழங்காததால் செங்கல் சூளைகள் இயங்கவில்லை. இத்தொழிலை நம்பியுள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாய் பகுதியில் உள்ள கரம்பை மண், செம்மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE