ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு வந்த பெண் ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செவிலியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வேண்டும். மேலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணியாளர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும். இதுபோன்ற புகார்களை மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா தலைமை வகித்தார். நிர்வாகிகள் மல்லிகா, ஜென்னி, யமுனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE