மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் விக்கிர மங்கலம் ஊராட்சி வையத்தான் கிராமத்தினர் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வி.பால்சாமி தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், வையத்தான் கிராமத்தில் 4.55 ஏக்கர் பரப்பு ஊருணி புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்து விளைநிலமாக பயன்படுத்துகின்றனர். ஊரு ணியை மீட்டு தண்ணீர் நிரப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.