தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்கு - ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா கட்டுப்பாடுகள், தொடர்ந்து பெய்த கன மழையால், திருவண் ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த 2 வாரங்களாக குறைவாக இருந்தது. தற்போது ஓரிரு நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட் டுள்ளதால், ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், அண்ணாமலையார் கோயிலுக்கு வழக்கம் போல் படையெடுத்துள்ளனர்.

வார விடுமுறை நாளான நேற்றும், ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை கூடுத லாக இருந்தது. பொது தரிசனம் மட்டும் இல்லாமல் கட்டண தரிசனப் பாதையிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தன. இதனால், கோயில் உள்ளே நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர் மற்றும் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்