புயல் முன்னெச்சரிக்கை: சேலம் வழியாக செல்லும் 3 ரயில்கள் ரத்து :

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ‘ஜவாத்’ புயல் காரணமாக சேலம் வழியே செல்லும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ‘ஜவாத்’ புயல் வரும் 4-ம் தேதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து ஒடிசா, ஆந்திர மாநிலம் வழியாக சேலம், ஈரோடு, கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் (ரயில் எண்:12,508) ரயில் நேற்று (2-ம் தேதி) புறப்பட்டு இன்று (3-ம் தேதி) சேலம் வரும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பிஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் (ரயில் எண்:22644) மற்றும் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் - ஆலப்புழா தினசரி ரயில் இன்று (3-ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்