சேலத்தில் வீட்டு சுவர் இடிபாட்டில் இளைஞர் உடல் மீட்பு :

சேலத்தில் வீட்டின் சுவர் இடிபாட்டில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

சேலம் குகை ராமலிங்கசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மளிகை பொருட்கள் வியாபாரி ஆறுமுகம். இவர் அப்பகுதியில் உள்ள பழுதடைந்த வீட்டை வாங்கி புதிய வீடு கட்ட வீட்டின் மேற்கூரையை அகற்றியிருந்தார். நேற்று வீட்டின் சுவரை இடிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் அங்கு சென்றபோது, ஏற்கெனவே மழைக்கு இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளுக்கு இடையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற செவ்வாய்ப்பேட்டை போலீஸார் இடிபாட்டில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஷ்குமார் (24) என்பது தெரிந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்