வெவ்வேறு சம்பவங்களில் 37 பவுன் ஏடிஎம், ரேஷன் கார்டுகள் திருட்டு :

கோ.புதூரைச் சேர்ந்த ஞானசேகர் மனைவி இந்துராணி (62). கடந்த 26-ம் தேதி வெளியூர் செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்றார். பேருந்து நிலைய கிழக்குப் பகுதியில் நின்றிருந்த அவரிடம் பேச்சுக்கொடுத்த மர்ம நபர், திடீரென அவர் அணிந்திருந்த 18 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.

திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கணபதி ஆனந்தம் (38). கடந்த 29-ம் தேதி பூட்டியிருந்த இவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர் பீரோவில் இருந்த மொபைல் போன், 4 ஏடிஎம் கார்டுகள், ரேஷன் கார்டு மற்றும் ரூ.96 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE