போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது :

By செய்திப்பிரிவு

தென்காசி, கூலக்கடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி காவல் நிலைய போலீஸ்காரர் பராக்கிரம பாண்டியன், விரைந்து சென்று, மவுன்ட் ரோடு பகுதியில் காரை நிறுத்தி, அதில் இருந்த கீழப்புலியூரைச் சேர்ந்த சுரேஷ் (35), என்பவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, சுரேஷ் மற்றும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அவரது தம்பி கண்ணன் ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த தென்காசி போலீஸார், சுரேஷ், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்