மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு தொடக்கம் :

திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு விக்கிரமசிங்கபுரத்தில் நேற்று தொடங்கியது.

மாநாட்டின் தொடக்கமாக ஏ. நல்லசிவன், எம். ராஜாங்கம், அசோக், உமாநாத் நினைவு ஜோதிகள் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து மாநாட்டு வளாகத்துக்கு எடுத்துவரப்பட்டன. இந்த ஜோதிகளை முக்கிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். கட்சி நிர்வாகி வீ. பழனி கொடியேற்றினார். ஆர். மோகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சுப்புராஜ் வரவேற்றார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

மாநாட்டின் 2-வது நாளான இன்று காலை 9.30 மணிக்கு பிரதிநிதிகள் வாதம், தொகுப்புரை, மாவட்ட குழு தேர்வு, மாநில மாநாடு பிரதிநிதிகள் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மாநாடு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் நிறைவுரை ஆற்றுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE