அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்ட செயலாக்க அலுவலகம் (மகளிர் திட்டம்), கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து, கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நாளை (நவ.27) தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் ஐ.டி., ஆட்டோ மொபைல், கார்மென்ட்ஸ், கட்டுமானம், விற்பனைத்துறை சார்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. எனவே, எட்டாம் வகுப்பு முதல் தொழிநுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுநிலை பட்டம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம். முகாமுக்கு வரும்போது உரிய சான்றுகளை எடுத்துவர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0422-2301855 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE