கோவை மத்திய சிறையிலிருந்து : 99 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை :

கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து, 99 கைதிகளை விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1,800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்தநாளையொட்டி, 700 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் விடுவிக்கப்பட உள்ள கைதிகளின் பட்டியல் தயாராகிவருகிறது. இதுகுறித்து, கோவை சரக சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘கோவை சிறையில், பத்தாண்டு தண்டனைக் காலத்தை கடந்த 132 கைதிகள் உள்ளனர். சேலம் சிறையில் பத்தாண்டு தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் 32 பேர் உள்ளனர். சிறையில் இருந்து வெளியே சென்றால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாதவர்கள் யார், சிறையில் நன்னடத்தையுடன் இருந்தவர்கள் யார் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், முதல்கட்டமாக கோவையில் 99 கைதிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். அரசின் இறுதி ஒப்புதல் பெற்று, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE