தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. தொமுச நிர்வாகி தர்மன் தலைமைவகித்தார். `மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்யவேண்டும். வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட மசோதா 2020-ஐ நிறைவேற்றக் கூடாது. முறைசாரா தொழிலாளர்களுக்கான வாரியத்தை சீர்குலைக்க கூடாது. ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். தினசரி ஊதியத்தைஉயர்த்த வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு விற்க கூடாதுஎன வலியுறுத்தி, வரும் 26-ம் தேதிவண்ணார்பேட்டை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்