நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் :

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்