கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை :

கரூர் வெங்கமேடு விவிஜி நகரை அடுத்த காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மோகன்-பவானி தம்பதியரின் இளைய மகள் கிருத்திகா(19). இவர், ஆட்டை யாம்பரப்பு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள மின்விசிறி யில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொ டர்பாக வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 19-ம் தேதி பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அதே பகுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE