தேசிய நூலக வார விழா நிறைவு :

அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

நிறைவு விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலர் ரா.சண்முக நாதன் தலைமை வகித்தார். புவியியலாளர் சந்திரசேகர், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ம.ராவணன் உள்ளிட்டோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE