புதுச்சேரியில் புதிதாக 43 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 2,124 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 19, காரைக்காலில் 16, ஏனாமில் 7, மாஹேவில் 1 என மொத்தம் 43 பேருக்கு (2.02 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 74 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 243 பேரும் என மொத்தமாக 317 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இறப்பு எண்ணிக்கை 1,869 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 445 (98.30 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 390 பேருக்கு தடுப்பூசி (2-வது தவணை உள்பட) செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE