சமூக தணிக்கை சிறப்பு கிராமசபா கூட்டம் :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

மூத்த குடிமகன் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராதா, சின்னகாசி, கணேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சங்கர் வரவேற்றார்.

சமூக தணிக்கை சிறப்பு கிராமசபா கூட்டத்தில், 2020-21-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்தும் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை குறித்து விவாதிக் கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாநில சமூக தணிக்கை சங்கம் வட்டார வள அலுவலர் வசந்தா பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், மகளிர் குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE