கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம் :

கூடங்குளம் 2-வது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 2-வது அணுஉலையில் டர்பைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் பணிகள் முடிவுற்று மின்உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE