தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் - வழக்கறிஞர் வெட்டி கொலை :

தேனி மாவட்டம் உத்தமபா ளையத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கூடலூரைச் சேர்ந்த வழக்கறி ஞர் மதன்குமார் (34). இவருக்கும் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் என்ப வருக்கும் சொத்துப் பிரச்சினை இருந்தது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியான மதன்குமாரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து உத்தமபாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சார் ஆட்சியர் குடியிருப்பு வளாகம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. தடுமாறி விழுந்த மதன்குமாரை 4 பேர் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். சம்பவ இடத் தை எஸ்பி பிரவீண் உமேஷ் டோங்கரே பார்வையிட்டார். 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE