வெள்ளோடு பெருமாள் கோயிலுக்கு சொந்தமானரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு :

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் ஆதி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான 2.43 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு புகார்கள் சென்ற நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையில், வருவாய்துறையினர், பொதுமக்கள் முன்னிலையில், இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன. ரூ.12 கோடி மதிப்பிலான 2.43 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், இது கோயிலுக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE