குட்கா விற்ற பெட்டிக் கடைக்கு சீல் :

திருச்சி: திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலர்கள் கடந்த செப்.24-ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது, அந்தக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், அதன்பிறகும் அந்தக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கடந்த மாதம் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில், சென்னை உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்படி அந்த பெட்டிக் கடைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தன், ஸ்டாலின், மகாதேவன், சையது இப்ராகிம், வடிவேல் ஆகியோர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE