தலைமறைவாக இருந்த டாக்டர் கைது :

கரூர்: கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் ஜெ.ரஜினிகாந்த்(55). இவரது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண், தனக்கு தீபாவளி போனஸ் குறைவாக வழங்கப்பட்டதாகக் கூறி, அதை வாங்க மறுத்ததுடன் வேலைக்கும் செல்லாமல் இருந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் 17 வயது மகளை வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்ட டாக்டர் ரஜினிகாந்த், மருத்துவமனைக்கு வந்து, அந்தச் சிறுமியின் தாய்க்கு உரிய தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடையை பெற்றுச் செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற அச்சிறுமிக்கு டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதற்கு மருத்துவமனை மேலாளர் சரவணன்(55) என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 14-ம் தேதி சரவணனை கைது செய்தனர். தலைமறைவான டாக்டர் ரஜினிகாந்த்தை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலாயுதம்பாளையத்தில் போலீஸார் வாகன சோதனை நடத்தியபோது, அவ்வழியாக காரில் வந்த டாக்டர் ரஜினிகாந்த்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE