வேலூரில் விசாரணை கைதி உயிரிழப்பு :

வேலூர்: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர், வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு குடியாத்தம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் கிளை சிறையில் இருந்து வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு ரமேஷ் மாற்றப்பட்டார். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE