சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பதிவு :

ஆம்பூர்: ஆம்பூரில் சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் மீது ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் சாராய வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில், ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் செல்வம் மீது குண்டர் சட்டம் பதிவு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE