திருப்பாலைக்குடி அருகே விபத்தில் பெண் மரணம் :

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே ஏ.மணக்குடியைச் சேர்ந்த வெள்ளி முத்தன் மனைவி செல்வி (எ) கருப்பாயி(50). இவர் அருகிலுள்ள பேரையூரைச் சேர்ந்த ராசு என்பவரின் வய லுக்கு கடந்த 14-ம் தேதி களை எடுக்கச் சென்றார்.

அன்றிரவு அங்கு தங்கிய செல்வி, நேற்று முன்தினம் காலை ராசுவின் மோட்டார் சைக்கிளில் கண்ணாரேந்தல் சாலையில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவரை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

திருப்பாலைக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE