தேனியில் கல்லூரி மாணவியருக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுகாதாரத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கேகே.சேகர், கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ், இணைச் செயலாளர்கள் கே.வன்னியராஜன், கே.சுப்புராஜ், முதல்வர் எஸ்.சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE