குறிஞ்சிப்பாடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் எம்.ஆர்.கே. ஆலோசனை :

குறிஞ்சிப்பாடியில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து பேரூராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

குறிஞ்சிப்பாடியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிசெயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மாதிரி வரை படத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் காட்டி ஆலோசனை நடத்தினர்.

ஏற்கெனவே, இயங்கி வரும் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலைய கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதற்கிடையே இங்கு நவீன பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்