அரியலூர், புதுக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தமிழார்வன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் ஆறுமுகம் (இந்திய கம்யூ.), புனிதன் (மார்க்சிஸ்ட் கம்யூ.) ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் மருதமுத்து (இந்திய கம்யூ.), சவுரிராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ.), கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் ஜீவா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எல்.ராசு, நிர்வாகிகள் பிரதாப்சிங், க.ராசு, ஏ.ராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE