மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி :

திருநெல்வேலியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் முதலாமாண்டு இளநிலை மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. கணிதத்துறை உதவி பேராசிரியை ராணி தொடக்க உரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் ஜி. ரவிகுமார் கருத்துரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல புலமுதல்வர் என். செண்பகவிநாயகமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறை உதவி பேராசிரியர் ஜேசு வேதநாயகி நன்றி கூறினார். வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE