தேனியில் கர்ப்பிணி தற்கொலை :

தேனியில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கஸ்தூரி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கஸ்தூரி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், அவருக்கும் கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது கஸ்தூரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராணி அவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்