கரூரில் இன்று - காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் :

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நவ.10-ம் தேதி(இன்று) மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவன காஸ் முகவர்கள், மாவட்ட காஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். எனவே, காஸ் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தில் உள்ள குறைகள், புகார்களை தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE