நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனைக் கூட்டம் :

திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர்கள் கருப்ப சாமிபாண்டியன், சுதாபரமசிவன், முன்னாள் எம்.பி., சவுந்தர்ராஜன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.பி. ஆதித்தன், மைக்கேல்ராயப்பன், அவை தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் துணைமேயர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிபெற தீவிரமாக பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை நடைபெறும் நிலையில் எப்பகுதியிலும் விடுபடாமல் வாக்காளர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பணியாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE